தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் நானே வருவேன்… செல்வராகவன் தனுஷ் படத்தில் ஏற்பட்ட குழப்பம்!
- பள்ளி திறந்த இரண்டே நாளில் மாணவிக்கு கொரோனா? – நாமக்கலில் அதிர்ச்சி!
- தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை! – மதுரை மாநகராட்சி எச்சரிக்கை!
- பச்சையப்பன் கல்லூரியில் ரூட்டு தல பஞ்சாயத்து..! – ஊர்வலம் சென்ற மாணவர்கள் மீது வழக்கு!
- புதிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கட்டுப்பாடு
பல மாதங்களுக்கு பிறகு முதுமலை காப்பகம் திறப்பு! – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா தளங்கள், சரணாலயங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது வழங்கப்பட்டு வரும் தளர்வுகளால் சுற்றுலா தளங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முதுமலை புலிகள் காப்பகம் பார்வையாளர்களுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ம் தேதி முதல் பயணிகளுக்கான யானை சவாரி தொடங்கப்படுவதுடன், தங்கும் விடுதிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வருகையை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
