தொடர்புடைய செய்திகள்
- எதிர்பார்த்ததை விட அதிக ஸ்கோர் எடுக்க வைத்தனர்… கேப்டன் தோனி பாராட்டு!
- மீன் வாங்கலையோ மீன்.. இது புரட்டாசிடா அம்பி! – காத்து வாங்கும் இறைச்சி கடைகள்!
- மத்திய அரசுக்கு எதிராக இன்று திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம்!
- ஒரு நாளில் ஒரு மில்லியன் வியூஸ்… சிவகுமாரின் சபதம் டிரைலர் சாதனை!
- புரட்டாசி மாத பௌர்ணமியில் விரதமிருந்தால் என்ன கிடைக்கும்?
மணல் கடத்தல் - பாயும் வழக்குகலால் நெருக்கடியில் வீரமணி
சொத்து குவிப்பு வழக்கோடு மணல் கடத்தல் வழக்கும் பாய்வதால் கே.சி.வீரமணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். கே.சி.வீரமணி வீடுகளில் இருந்து பணம், நகை, கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 551 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
கே.சி.வீரமணி அமைச்சராக இருந்தபோது அவரது பெயரிலும், பினாமிகள் பெயரிலும் 23 லாரிகளில் பாலாற்றில் இருந்து இரவு, பகலாக மணல் கடத்தி விற்பனை செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கும் கடத்தல் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கோடு மணல் கடத்தல் வழக்கும் பாய்வதால் கே.சி.வீரமணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
