வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (07:45 IST)

இடுப்பில் துப்பாக்கியுடன் கலெக்டரை சந்திக்க வந்த கருணாஸ்!

நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் இடுப்பில் துப்பாக்கியுடன் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம்போல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், கலெக்டர் வீரராகவராவ் சந்தித்து பேசினார். அவர் கலெக்டரை சந்திக்க சென்றபோது அவருடைய இடுப்பில் துப்பாக்கி இருந்ததை பார்த்து பொதுமக்களும் போலீசார்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்..
 
கலெக்டரை சந்தித்து தான் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த விழாவில் கலெக்டரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கருணாஸ் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. ஆனால் கலெக்டரை சந்திக்க வரும்போது அவர் துப்பாக்கியுடன் சென்றது ஏன்? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது
 
இதுகுறித்து அவரது வட்டாரங்கள் கூறியபோது 'கருணாஸ் எப்போதும் லைசன்ஸ் உள்ள துப்பாக்கியை வைத்து இருப்பார் என்றும் ஆனால் அவர் வழக்கமாக அந்த துப்பாக்கியை காரில் தான் வைத்திருப்பார் என்றும் தற்போது தான் அவர் இடுப்பில் வைத்து உள்ளதாகவும் தெரிவித்தனர். வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாதுகாப்பிற்காக அவர் தன்னுடன் துப்பாக்கியை கொண்டு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது