தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் அவசியமில்லை! – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
- மாணவர் மரணத்திற்கு திமுகதான் பொறுப்பு! – பாஜக அண்ணாமலை கண்டனம்!
- மாணவனை மரணக்குழியில் தள்ளிவிட்டீர்கள்! – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
- தடுப்பூசி போட்டால் தங்க மோதிரம், பித்தளை குடம்! – திருவண்ணாமலையில் வித்தியாச முயற்சி!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குகிறோம்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நீட் தேர்வு பயத்தால் மாணவர் உயிரிழந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ” நீட் எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்! கல்வியால் தகுதி வரட்டும்; தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும்! நாளை நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம். நீட்-ஐ இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாகக் கொண்டு செல்வோம்” என தெரிவித்துள்ளார்.
நீட் எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்!
— M.K.Stalin (@mkstalin) September 12, 2021
கல்வியால் தகுதி வரட்டும்; தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும்!
நாளை நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம்; #NEET-ஐ இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாகக் கொண்டு செல்வோம். pic.twitter.com/iAI4zm9knA
அடுத்த கட்டுரையில்
