1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin says he take actions even Dmk make mistakes

திமுகவினரே தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன்! – மு.க.ஸ்டாலின் உறுதி!

Mk Stalin
திமுகவினர் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு, முன்னாள் அமைச்சர் மோசடி வழக்கில் கைது போன்ற சம்பவங்கள் தொடர்பாக, திமுகவினர் காழ்ப்புணர்ச்சியோடு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. திமுகவை சேர்ந்தவர்கள் யார் தவறு செய்தாலும், ஒரு சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும், அண்ணா மீது ஆணையாக, கலைஞர் மீது ஆணையாக சொல்கிறேன் இந்த ஸ்டாலின் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ரேஷன் கடைகளின் சிறப்பு பொது விநியோகத் திட்டம் நீட்டிப்பு!