தொடர்புடைய செய்திகள்
- பள்ளிகள் திறப்பது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் - அன்பில் மகேஷ்!
- கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம்! – தொடங்கி வைத்தார் முதல்வர்!
- சமூகநீதியை கவனிக்க கண்காணிப்பு குழு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
- களத்தில் சந்திப்போம்… வெற்றி நமதே..! – பிரச்சாரத்திற்கு கிளம்பும் கமல்ஹாசன்!
- வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து?? – கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு!
நாளை சமூக நீதி நாள்! கலைஞர் சிலை முன்பு உறுதியேற்கும் முதல்வர்!
நாளை பெரியாரின் பிறந்தநாளில் கலைஞர் சிலை முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிநாள் உறுதியேற்க உள்ளார்.
திராவிட இயக்கங்களில் தொடக்கத்திற்கு காரணமான பெரியாரின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதிநாளாக கொண்டாட உள்ளதாக முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நாளை பெரியார் பிறந்தநாளில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகள் முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
