1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:08 IST)

இலங்கை தமிழகர்களுக்கு ரேஷனில் இலவச அரிசி! – முதல்வர் அறிவிப்பு!

இலங்கை தமிழர்களுக்கு ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகான சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று இலங்கை தமிழ் அகதி மக்கள் குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகள் வாழும் வீடுகள், முகாம்களுக்கு செல்லும் சாலைகள் புனரமைத்து தரப்படும். மேலும் ஈழத்தமிழர்கள் தமிழக ரேசன் கடைகளில் இலவச அரிசி பெற்றுக்கொள்ளலாம். மேலும் இலங்கை தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.