தொடர்புடைய செய்திகள்
- ஆமாஞ்சாமி அரசே; சூழ்ச்சியால் வயிறு கழுவும் கும்பலே: வார்னிங் கொடுத்த உதயநிதி!
- வாழ்த்து மழையில் நனைந்த சபரீசன் – ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசா?
- வாய்பில்ல ராஜா வாய்பில்ல... சசிகலாவுக்கு நோ எண்ட்ரி போடும் அதிமுக அமைச்சர்கள்!
- உதயநிதியுடன் மீராமிதுன்: திமுகவில் இணைகிறாரா?
- சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் அதிமுக அரசு எதிரி - அமைச்சர் வீரமணி
கருப்பர் கூட்டத்திற்கு கருப்பு கொடி தூக்காதது ஏன்? திமுகவிற்கு ஜெயகுமார் கேள்வி!
ஒரு மதத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஏன் திமுக போராட்டம் நடத்தவில்லை என ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் கந்தகஷ்டி கவசத்தில் இடம்பெற்று ஒருசில வார்த்தைகளை ஆபாசமாக விமர்சனம் செய்தது முருகன் பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அருவருப்பாகவும் ஆபாசமாகவும் அவர் செய்த விமர்சனம் இந்து மத ஆதரவாளர்களை குறிப்பாக முருக பக்தர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்த யுட்யூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயகுமார், எந்த மதமாக இருந்தாலும் மதிக்க வேண்டும். அந்த வகையில், அனைத்திற்கும் போராட்டம் நடத்தும் திமுக, ஒரு மதத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
