வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (15:39 IST)

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் அதிமுக அரசு எதிரி - அமைச்சர் வீரமணி

அதிமுக அரசும் கட்சியும்  சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை எதிர்த்துதான் ஆட்சி செய்யும் என தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முக நெருக்கமான  தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் தற்போது பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், சசிகலா சிறையிலிருந்தாலும் அவரைப் பற்றி பேச்சுகள் அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் குறையவில்லை. ஏன் டுவிட்டரில் கூட சசிகலா இந்திய அளவில் டிரெண்டிங் ஆனார்.

இந்நிலையில் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, இன்றூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒருவர் சசிகலா சிறையில் இர்நுது வெளியே வருவதாகக் செய்திகள் வெளியாகிறதே என கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது ,:

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை எதிர்த்தே அதிமுக கட்சியும் ஆட்சியும் நடைபெற்று வருகிறது எனறு கூறிய அவர் அதிமுகவுக்கு சசிகலா எதிரி என்று கூறினார்.