தொடர்புடைய செய்திகள்
- 25 வருடமாக கமலுக்கு பாடாத எஸ் பி பி! ஏன் தெரியுமா?
- ’’தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ‘’...நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன்!!
- ’’கமல்ஹாசன் நாட்டை ஆள நினைத்தால் ஒரு குடும்பம் உருப்படாது ’’- முதல்வர் விமர்சனம்
- கமல் விரும்பினால் அதிமுகவில் சேரலாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
- டார்ச் லைட் கேட்டு டீல் பேசுனாங்க!? கசியவிட்ட மக்கள் இயக்கம்!- மய்யம் மறுப்பு
ரஜினி - கமல் என்ன வேணா செய்யட்டும்: ஜெயகுமார்!
கமல் மற்றும் ரஜினி கூட்டணி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பது கட்சியின் விருப்பம். கமல், ரஜினியுடன் இணைவது அவரது தனிப்பட்ட கருத்து. கமல் விஸ்வரூபம் படத்தை தடை செய்த போது எம்.ஜி.ஆர் பற்றி பேசாதது ஏன். எம்.ஜி.ஆர். வாக்குகளை வாங்க நினைத்தால் கானல் நீராகத்தான் போவார்கள்.
இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள் வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள். கட்சிகள் எப்படி எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடலாம். கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம். கமல் மூன்றாவது, நான்காவது அணி கூட ஆரம்பிக்கலாம். ஆனால் முதல் அணியாக அதிமுகதான் இருக்கும் என கூறினார்.
