1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Jayakumar comments on DMK

கர்ணனுக்கு கவச குண்டலம்; திமுகவிற்கு கருப்பர் கூட்டம்: ஜெயகுமார் நக்கல்!

திமுக
கர்ணனும் கவச குண்டலமும் ஒட்டிப் பிறந்தது போல் திமுகவையும் கருப்பர் கூட்டத்தையும் பிரிக்க முடியாது என ஜெயகுமார் பேச்சு. 
 
கந்தசஷ்டி விவகாரத்தில் திமுக நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்போது இண்டஹ் விஷயம் கொஞ்சம் அடங்கிய நிலையில் அதை நினைவூட்டும் வகையில் அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
கர்ணனும் கவச குண்டலமும் ஒட்டிப் பிறந்தது போல் திமுகவையும் கருப்பர் கூட்டத்தையும் பிரிக்க முடியாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓட்டுக்காக நிறத்தை மாற்றுகிறார்கள் திமுக. நிறம் மாறுபவர்களுக்கு மக்கள் தகுந்த பதில் கொடுப்பார்கள். நிறம் மாறும் கட்சி அதிமுக அல்ல, அதிமுகவை பொருத்தவரை எம்மதமும் சம்மதம், மதங்களையும் மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தக்கூடாது என்றார்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கன்னியாகுமரி காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்: அதிர்ச்சி தகவல்