1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Anbil Mahesh says about plus two exam

பிளஸ் டு பொதுத்தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

பிளஸ் டூ
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா என்பது குறித்து சற்று முன்னர் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி அளித்துள்ளார் 
 
இந்த பேட்டியில் பிளஸ் டூ பொதுத் தேர்வு தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், கல்வியாளர்களின் அறிவுரையை பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் 
 
மேலும் சென்னையில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
 
மேலும் அடுத்த கல்வி ஆண்டுக்காக பள்ளி சேர்க்கைக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூட்டமாக வரவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அதுமட்டுமின்றி கொரோனா கண்டறியும் பணியில் ஆசிரியர்கள் தன்னார்வலராக பணியாற்றலாம் என்றும் அன்பில் மகேஷ் தனது பேட்டியில் கூறியுள்ளார்
அடுத்த கட்டுரையில்
Super Blood Moon: இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?