தொடர்புடைய செய்திகள்
- 14 ஆம் தேதி கண்டன நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் - சீமான் அறிவிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்படுகிறதா?
- மேட்டூர் அணையில் இருந்து 20,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: வெள்ள எச்சரிக்கை
- விழுப்புரம் தளவானூர் தடுப்பணை உடைந்தது: விவசாயிகள் கவலை!
- அணையை திறந்தது கேரள அமைச்சர் இல்லை.. நம்மாட்கள்! – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!
முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை அதிகாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது
இதனை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கரையோர மக்கள் தாழ்வான பகுதியில் இருந்தால் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாறிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்ட பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
