1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:31 IST)

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்படுகிறதா?

மேட்டூர் அணையில் தற்போது உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் உபரிநீர் நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்ற நிலையில் தற்போது 119 அடிக்கு தண்ணீர் உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுவதால் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது என்றும் அதனால் உபரிநீர் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஒருவேளை நாளை உபரிநீர் இன்று நிறுத்தப்பட்டால் நாளை அல்லது நாளை மறுநாள் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது