1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Men Changed into Women

பெண்ணாக மாறிய ஆண் துறவி

பெண்ணாக
பொறியியல் முதுகலை வகுப்பில் படித்த ஆண் ஒருவர், பெண்ணாக மாறி துறவி ஆனார். 
 

 
எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து ஜோதிகுமார் (29) பொறியியல் பட்டப் படிப்பு முடித்துவிட்டு தொடர்ந்து முதுகலைப் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். ஓங்கார ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 7 ஆண்டுகளாக ஆன்மிகப் பயிற்சி பெற்றார்.

படித்துக் கொண்டிருக்கும் போதே இரு நாள், அம்பிகை இவருடைய கனவில் வந்து ஆசிர்வதித்ததால், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, பெண்ணுக்கான உடைகளை உடுத்திக் கொண்டு துறவி ஆனார். 
 
தன்னுடைய பெயரையும் ராஜமாதா பிரேமலதாதேவி என்று மாற்றிக் கொண்டார். இந்நிகழ்சிகளில் அப்பர் சுவாமிகள் திருமடம் சிவஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீன சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செüந்திரராஜன் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர்.இந்நிலையில் தனது ஆன்மிகப் பணிகளை காஞ்சிபுரத்தில் இருந்து மே 29-ஆம் தேதி முதல் தொடங்குகிறார்.
 
 
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
தினமும் காலையில் தவறாமல் செய்ய வேண்டியவை (வீடியோ)