தொடர்புடைய செய்திகள்
- வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.. சென்னையில் சோகம்..!
- போதை ஊசி செலுத்திய 17 வயது சிறுவன்.! மயங்கி விழுந்து பலி.! சென்னையில் பரபரப்பு..!!
- நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!
- கல்லூரி மாணவன் ஓட ஓட விரட்டி படுகொலை! காதலி கண்முன்னே பயங்கரம்..!!
- பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
மாணவனுக்கு ஊசி போட்ட மெடிக்கல் கடை உரிமையாளர். மாணவன் உயிரிழந்ததால் பரபரப்பு..!
எட்டாம் வகுப்பு மாணவனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மெடிக்கல் கடை உரிமையாளர் மருந்து மாத்திரை கொடுத்து ஊசி போட்டுள்ள நிலையில் அந்த மாணவன் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் மகன் கீர்த்திவாசன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென கீர்த்தி வாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து அருகில் இருந்த மெடிக்கல் கடையில் மருந்து, மாத்திரை வாங்கி கொடுத்த நிலையில், மெடிக்கல் கடை நடத்தி வரும் செந்தில் குமார் என்பவர், கீர்த்தி வாசனுக்கு ஊசி போட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் மீண்டும் மாணவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கீர்த்தி வாசன் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து மெடிக்கல் கடை உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Mahendran
