1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (17:55 IST)

ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிளவுக்கு சுயநலமே காரணம்: மருது அழகுராஜ்

Marudhu alaguraj
ஓபிஎஸ்-ஈபிஎஸ்  பிளவுக்கு சுயநலமே காரணம் என மருது அழகுராஜ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ்-ஈபிஎஸ்  ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே ஒரு சில தலைவர்கள் இருதலை ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரையும் விமர்சனம் செய்த நிலையில் தற்போது மருது அழகுராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையிலான பிளவுக்கு சுயநலமே காரணம் என்றும் அதிமுகவை ஓபிஎஸ்-ஈபிஎஸ் முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பினர் அவமதிப்பு செய்துள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.