தொடர்புடைய செய்திகள்
- பிற்பட்ட சமூகமா? பிற்படுத்தப்பட்ட சமூகமா? – சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குள்ளான விளம்பரம்!
- காபி 25 ரூபாய்; தடுப்பூசி போட்டிருந்தா 1 ரூபாய்தான்! – கவனம் ஈர்க்கும் மதுராந்தகம் காபி ஷாப்!
- தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை! – வானிலை ஆய்வு மையம்!
- கருணாநிதி பட திறப்பு விழா; ரஜினிக்கு அழைப்பு! – அதிமுக வர மறுப்பு!
- வகுப்பறைகளை தயார் செய்யும் ஆசிரியர்கள்! விரைவில் பள்ளிகள் திறப்பு?
மதுரையில் களைக்கட்டிய பூ வியாபாரம்; பூ சந்தையை மூடிய மாவட்ட ஆட்சியர்!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மதுரை பூ மார்க்கெட்டில் மக்கள் குவிந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் உயர தொடங்கியுள்ள நிலையில் முக்கிய நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை ஆடிப்பெருக்கு என்பதால் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியது.
பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பலர் பூ வாங்க மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் அதிகமாக குவிந்ததால் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
