1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (18:57 IST)

அடுத்த பிறவியில் வவ்வால், பெருச்சாளியாக பிறப்பார்கள்: மதுரை ஆதீனம் சாபம்

அடுத்த பிறவியில் வவ்வால், பெருச்சாளியாக பிறப்பார்கள்: மதுரை ஆதீனம் சாபம்
அடுத்த பிறவியில் வவ்வால் மற்றும் பெருச்சாளி ஆக பிறப்பார்கள் என்று மதுரை ஆதினம் சாபம் விடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோயில் குத்தகை பணம் கொடுத்தவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால் மற்றும் பெருச்சாளி ஆக பிறப்பார்கள் என்றும் தற்போது பலருக்கு நல்ல எண்ணங்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
அதனால் நல்ல சம்பளம் அழகு இருந்தாலும் பெண் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார் பெண் கிடைத்தாலும் நல்ல மாமியார் கிடைப்பதில்லை என்றும் மாமியார் நல்லவிதமாக இருந்தால் மருமகள் சரியாக இருப்பது இல்லை என்றும் அவர் சரமாரியாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது