தொடர்புடைய செய்திகள்
- தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்- மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
- பள்ளி மாணவிகளிடையே “கேங் வார்”? 4 நாட்கள் விடுமுறை! – புதுச்சேரியில் பரபரப்பு!
- காய்ச்சல் பரவி வருவதால் உடனே பள்ளிக்கு விடுமுறை விடுங்கள்: பாமக ராமதாஸ் கோரிக்கை
- மாணவிகள் வீடியோ விவகாரம்; போராட்டம் வாபஸ்! 6 நாட்கள் விடுமுறை!
- காய்ச்சல் எதிரொலி: புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகள் விடுமுறையா?
பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு அரசியல் தலைவர்கள் யாரும் அறிக்கை விட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காய்ச்சல் அதிகமாகி வருவதை அடுத்து அண்டை மாநிலமான புதுவையில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தமிழகத்திலும் அதேபோல் விடுமுறை அளிக்க வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை மூலம் அறிவித்து வருகிறார்கள் என்றும் இந்த காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்றும் எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்டத்தை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
அடுத்த கட்டுரையில்
