1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Lockdown restriction sto be continued in heavy corona affected districts

ஊரடங்கு முடிந்தாலும், கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்...

தமிழகம்
பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த தமிழக அரசு முடிவு என தகவல். 
 
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. எனவே இது குறித்து முடிவெடுக்க சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவர்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார் முதல்வர். 
 
மருத்துவ குழுவினர், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும் மாறாக கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் பொதுமுடக்கத்தை தீவிரமாக்கலாம் என யோசனை கூறியுள்ளதாக தெரிகிறது.  
 
எனவே, பொதுமுடக்கம் நிட்டிப்பா அல்லது கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்படுமா என்பதை தமிழக அரசு தான் முடிவெடுக்கும் என எதிர்ப்பார்க்கபப்ட்டுகிறது. 
 
ஆனால், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த தமிழக அரசு முடிவு என தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ஊரடங்கு குறித்து தமிழக அரசு சார்பில் அதிகார்ப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. 
About Writer
Sugapriya Prakash