தொடர்புடைய செய்திகள்
- நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் குவிந்த ரசிகர்கள்...
- இந்தியாவில் முழுமையான இந்து மாநிலம் தமிழ்நாடுதான் ! – துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு !
- 'சோ'வை வளர்த்து விட்டதே கலைஞர்தான் ! ரஜினியின் மற்றொரு சர்ச்சைப் பேச்சு !
- ரஜினிகாந்த் கூறிய பால்காரர் குட்டிக்கதையால் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு
- ரஜினிக்கு பதிலடி தருவதாக நினைத்து மறந்துபோய் பொங்கல் வாழ்த்து சொன்ன உதயநிதி!
ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்: கொளத்தூர் மணி ஆவேச அறிக்கை!
மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து பொய்யான தகவலை பரப்பிய ரஜினிகாந்த் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது. பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்
தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியைப் பரப்பி, பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்
சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழக அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெறும்
இவ்வாறு கொளத்தூர் மணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
