தொடர்புடைய செய்திகள்
- இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் செலவை அரசே ஏற்கும்! – முதல்வர் அறிவிப்பு!
- அதிமுகவில் எடப்பாடியார்- ஓபிஎஸ் நியமனம் செல்லும்! – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
- நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? – உச்சநீதிமன்றம் கேள்வி!
- கள்ளக்காதலுக்கு இடையூறு; 7 வயது சிறுமியை கொன்று வீசிய தாய், காதலன் கைது!
- மீண்டும் தொடங்கும் மதுரை – துபாய் விமான சேவை! – முன்பதிவை தொடங்கிய ஸ்பைஸ்ஜெட்!
கருமம்.. இத பாத்தா ரஸ்க் தின்ன தோணுமா? – வடமாநில தொழிலாளியின் செய்கையையடுத்து நடவடிக்கை!
ரஸ்க் பேக்டரி ஒன்றில் வடமாநில தொழிலாளி ரஸ்கை நக்கி, காலால் மிதித்து பாக்கெட் போடுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பண்டங்களில் ரஸ்க் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ரஸ்க் தயாரிப்பது குடிசைத் தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் ரஸ்க்கை பாக்கெட் செய்யும் முன் நக்குவதும், காலால் மிதிப்பதும் போன்ற அருவருப்பான செயல்களை செய்வது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காரைக்குடி ரஸ்க் தயாரிப்பகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரஸ்க்குகளை தரையில் கொட்டி பாக்கெட் செய்வதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சுகாதாரமற்ற முறையில் செய்யப்பட்ட 200 கிலோ ரஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்த ரஸ்க் தயாரிப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
