1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (07:57 IST)

நான் இனி உங்கள் சொத்து... கமல் பேச்சு

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து நேற்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. இதையடுத்து திருவாரூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விழா நடந்தது.

இந்த விழாவில் அக்கட்சியின் நிறுவனர் கமல் ஹாசன் பேசுகையில், குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளதுமக்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்து இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
தேர்தலில் வாக்களிக்கும் போது மக்கள் மனம் மாறாமல் நாட்டை பற்றி நினைத்துக்கொள்ள வேண்டும்நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும்பங்கு தமிழர்களுக்கு உள்ளது
 
நான் இனி உங்கள் சொத்து; என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.