1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:07 IST)

சமீபத்தில் பாஜகவில் இணைந்த ரவுடி; ஆந்திராவில் கைது!

தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கல்வெட்டு ரவி. இவர்மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் சமீபத்தில் ரவி பாஜகவில் இணைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கொலை வழக்கு ஒன்றில் ரவி ஆஜர் ஆகாத காரணத்தால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. அதை தொடர்ந்து தலைமறைவான கல்வெட்டு ரவியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கல்வெட்டு ரவி ஆந்திராவில் பதுங்கியிருப்பது தெரிய வர தனிப்படை போலீஸார் ரவியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.