1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (22:58 IST)

தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகளை இயக்க அறிவுறுத்தல் - பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும்கூட  இன்னும் கொரோனா தொற்று முழுமையாக குணமடையவில்லை.

சமீபத்தில்  பள்ளிகள் தொடங்கப்பட்டபோது, தமிழகத்தில் ஒரு மாணவனுக்குக் கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் தற்போது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  9  மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது ஷிப்ட் முறையில் என்று சுழற்சி முறையில் வகுகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தொற்று அபாயம்  இருக்காது எனவும் தெரிகிறது.