1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:05 IST)

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்

தனது இடுப்பில் 2 செல்போன்களை வைத்திருக்கும் ஒரு பெண்ணிற்கு, அமைச்சர் கடம்பூர் ராஜு ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. உதவி பெறுபவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பின்பே அவர்களுக்கு அமைச்சர்கள் நலத்திட்டங்களை வழங்குவது வழக்கம்.
 
இந்நிலையில், சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, அரசு உதவி பெரும் ஒரு பெண் தனது இடுப்பின் இரண்டு ஆண்டிராய்டு செல்போன்களை வைத்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
இப்புகைப்படத்தை கண்ட பலரும், 2 செல்போன் வைத்திருக்கும் பெண் எப்படி ஏழையாக இருக்க முடியும்?, அவருக்கு எப்படி அமைச்சர் ஏழைக்கான உதவிகளை வழங்குகிறார்? என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.