தொடர்புடைய செய்திகள்
- ஸ்டாலினால் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாது: ஓபிஎஸ்
- 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை இத்தனை முறை உயர்த்தப்பட்டுள்ளதா?
- உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 96 வயது பாட்டிக்கு சின்னம் ஒதுக்கீடு!
- மனு வாபஸ் பெற அவகாசம் முடிந்தது! – வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்!
- மலர்ந்தது தாமரை; போட்டியின்றி தேர்வான முதல் பாஜக கவுன்சிலர்!
கடம்பூர் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம்
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் 3 வார்டுகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
இதனை அடுத்து அந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து 3 வார்டுகளிலும் சுயச்சை வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்காமல் அந்த வார்டுகளில் தேர்தலை ஒத்தி வைத்து மற்ற வார்டுகளில் மட்டும் தேர்தலை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்
கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறை மற்றும் வழிமுறைகள் மீறப்பட்டால் 3 வார்டுகளில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும் புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
