தொடர்புடைய செய்திகள்
- 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: பரபரப்பான சூழ்நிலையில் இன்று இறுதி வாதம்
- ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் - கலக்கத்தில் தமிழக அரசு
- விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிரான மனு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- இது இன்று எழுதப்பட்ட தீர்ப்பல்ல...அன்றே கருணாநிதியால் எழுதப்பட்டது; இயக்குநர் நவீன்
- தீர்ப்பு கேட்டு கண்ணீர் விட்ட கை கூப்பிய மு.க.ஸ்டாலின்...
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இறுதி வாதம் இன்று முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அவர்களிடம் சென்றது. சத்தியநாராயணன் தலைமையில் இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கின் இறுதி வாதம் இன்று நடைபெற்றது. அனைத்து தரப்பினரின் வாதம் முடிந்த பின், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
