வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜனவரி 2018 (16:16 IST)

உருகுலைந்த உருவம்: கடைசி நாளில் போயஸ் கார்டனில் நடந்தது!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் அவரது தோழி சசிகலாவை பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசியுள்ளார்.
 
இதில் பேசிய அவர், ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவரது உருவம் உகுலைந்து இருந்தது. உயரம் குறைந்துவிட்டது. கடைசி நாளில் அவரது காரில் இருந்து கூட அவரால் இறங்க முடியவில்லை. சசிகலாவை அழைத்து வர சொன்னவர் தனது காலை அவரிடம் காட்டினார்.
 
தனது கால் ஷூவில் சுற்றியிருந்த புடவையை கூட அவரால் எடுக்க முடியாத நிலையில் இருந்தார். தனியாக நடக்க முடியாமல் சசிகலாவின் தோளில் கையைப்போட்டபடி ஜெயலலிதா வீட்டிற்குள் சென்றார். மேலும் தலைமைச் செயலகத்தில் முக்கியமான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தன்னையும் மறந்து ஜெயலலிதா தூங்கிவிட்டார் என தெரிவித்தார்.