தொடர்புடைய செய்திகள்
- கனமழை எதிரொலி: 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- சீனா நாட்டின் சோங்கிங்கில் கனமழை...15 பேர் உயிரிழப்பு
- 5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு..!
- கனமழை எதிரொலி.. பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் அதாவது ஜூலை 6 முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை மற்றும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கேரளா மற்றும் கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில் கன மழை வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
