1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஜூலை 2023 (09:23 IST)

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. 
 
குறிப்பாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ஐந்தறிவு மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
குற்றாலத்தில் சீசன் நன்றாக இருப்பதால் தமிழக மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதித்திருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அருவி அருகிலேயே சுற்றுலா பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் குளிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva