தொடர்புடைய செய்திகள்
- பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு; ஹெச்.ராஜா வேண்டுகோள்
- நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஐபிஎல் போராட்டம்: தெறிக்க விட்ட தமிழர்கள்
- மோடிக்கு எதிராக ஐஐடி மாணவர்கள் போராட்டம்
- மோடிக்கு எதிராக கருப்பு புறாக்களை பறக்கவிட்டு திமுகவினர் போராட்டம்
- எதிர்ப்புக்கு நடுவில் சென்னை வந்தார் மோடி...
சீமான் கைதா? சுற்றி வளைத்த அதிரடிப்படை
நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் இடையே திடீரென போலீசார் தடியடி நடத்தியதும், சீருடை அணிந்த போலீசார்களை நாம் தமிழர் கட்சியினர்கள் தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றது.
இதனையடுத்து சீமான் மீது கொலை முயற்சி உள்பட 10 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் எந்த நேரமும் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தபோது சீமானும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சீமான் பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இந்த மண்டபத்தை தற்போது அதிரடிப்படை சுற்றி வளைத்துள்ளது. சீமானின் வழக்கறிஞருக்கு கூட திருமண மண்டபத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இன்னும் சில நிமிடங்களில் சீமான் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
