1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. I will contest against PM Modi Seeman

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்-சீமான்

Seeman
அடுத்தாண்டு  நடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்காக இந்தியா முழுவதும் உள்ள  தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில்  சில கட்சிகள் இணைந்துள்ளன.

இந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி  தனித்துப் போட்டியிடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று சேலத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''அதிமுக பொதுச்செயலாளர் சீமான் எடப்பாடி பசனிசாமியை சந்தித்து பேசினேன். கூட்டணிக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் நான் ஏற்கவில்லை. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்… நாடாளுமன்றத் தேர்தலில்  நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
லியோ பட காட்சி ரத்து: தியேட்டர் மீது கல் வீசிய ரசிகர்கள்