தொடர்புடைய செய்திகள்
- பாஜகவுடன் கூட்டணி இல்லை என அழுத்தமாகச் சொல்லுங்கள்- ஈபிஎஸ்
- தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் ஒருநாள் வீழ்ந்து விடும்; சீமான் பேட்டி
- ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு? – சீமான் சரமாரி கேள்வி!
- நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி திமுக-மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
- அருந்ததி ராய் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு -சீமான் கண்டனம்
பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்-சீமான்
அடுத்தாண்டு நடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்காக இந்தியா முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஏற்கனவே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் சில கட்சிகள் இணைந்துள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று சேலத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''அதிமுக பொதுச்செயலாளர் சீமான் எடப்பாடி பசனிசாமியை சந்தித்து பேசினேன். கூட்டணிக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் நான் ஏற்கவில்லை. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்… நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
