தொடர்புடைய செய்திகள்
- மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு
- தமிழ்நாட்டு மீனவர்கள் கைது விவகாரம்- டிடிவி தினகரன் டுவீட்
- அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை- கே.சி. பழனிசாமி
- சத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பியில் ஆம் ஆத்மி தனித்து போட்டி.. I.N.D.I.A கூட்டணிக்கு சிக்கலா?
- அண்ணாமலை பாதயாத்திரை இன்று மீண்டும் தொடக்கம்.. மத்திய அமைச்சர் பங்கேற்பு..!
நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி திமுக-மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
அடுத்தாண்டு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.
இக்கூட்டணியில் இருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகியது.
இந்த நிலையில், வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்வோம் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று கூறியதாவது:
''பிரதமர் நரேந்திர மோடி உங்களில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாரிசு அரசியல் போல இல்லாமல், சாதாரண விவசாயி மகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தமிழ் நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்திடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ''நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி திமுக ''என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
