தொடர்புடைய செய்திகள்
- விழாவுக்கு வராத எடப்பாடியார்; எதிர் கட்சி தலைவர் ஓபிஎஸ்? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
- மீண்டும் கழக ஆட்சி தலைவரே! – தந்தை படத்திற்கு மரியாதை செலுத்தி கண் கலங்கிய ஸ்டாலின்!
- கொரோனா காலத்தில் நீங்கள் வந்திருப்பது நம்பிக்கையளிக்கிறது! – ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!
- தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்; ட்விட்டரில் அப்டேட்! – இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
- முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்; காரிலிருந்து திமுக கொடி நீக்கம்!
தமிழகம் மட்டுமல்ல.. 7 மாநிலங்களில் ஹரிநாடார் கைவரிசை! – போலீஸார் விசாரணை!
பெங்களூரு தொழில் அதிபருக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக ஹரிநாடார் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பல மாநிலங்களிலும் ஹரிநாடார் கைவரிசை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பனங்காட்டு படை கட்சியை நடத்தி வரும் ஹரி நாடார் சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் சமீபத்தில் ஹரிநாடார் தனக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி தன்னிடமிருந்து 16 கோடி ரூபாயை பறித்து மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெங்களூர் போலீஸார் கேராளா சென்றிருந்த ஹரி நாடாரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர். இந்நிலையில் ஹரிநாடாரிடம் விசாரணை மேற்கொண்டதில் மேலும் 7 மாநிலங்களில் இதுபோன்ற மோசடி செயல்கள் நடந்தது தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
