தொடர்புடைய செய்திகள்
- முதல் திருமண நாளை எங்கே கொண்டாடுவது… கணவன் மனைவி தகராறில் போன உயிர்!
- 3 உயிர்பலிகளுக்கு பின் இன்று நடைபெறுகிறது நீட் தேர்வு:
- தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் 3 பேர் தற்கொலை !!
- நீட் தேர்வு அச்சம்...ஆதித்யா என்ற மாணவர் தூக்க்கிட்டுத் தற்கொலை !
- நீட் தேர்வின் இறுதி மரணம் இது! நாம் செய்யப் போவது என்ன ? கமல் டுவீட் You sent 57 minutes ago டிவி நிகழ்ச்ச்சி
காதல் தோல்வியால் தற்கொலை நடக்கிறது… அதுக்காக காதலை தடை பண்ணமுடியுமா? ஹெச் ராஜா அடடே கேள்வி!
நீட் தேர்வு பயத்தால் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் அதற்கு எதிராக ஹெச் ராஜா பேசியுள்ளார்.
நீட் எனும் மருத்துவ நுழைவுத்தேர்வால் பல கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவும் பலியாகி வருகிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினாலும், மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர் பலியாகியுள்ளது.
சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று துர்கா தேவி மற்றும் ஆதித்யா என்ற இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று நீட் தேர்வு நடக்கிறது. இந்நிலையில் நிட் தேர்வுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ‘ஆண்டுதோறும் பிளஸ் டு தேர்வு முடிவுகள் தோல்வியால் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே போல காதல் தோல்வியாலும் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதற்காக காதலை தடை செய்ய சட்டம் போட முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
