தொடர்புடைய செய்திகள்
- 50 வயதில் 2வது திருமணம்.. தடையாக இருந்த மருமகளை கொலை செய்த மாமனார்..!
- ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு..!
- நாளை மெரீனா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை.. என்ன காரணம்?
- இலங்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலைவாசி எப்படி உள்ளது?
- ''ஐ.நா., அமைப்பில் பணியாற்ற பெண்களுக்கு தடை''- தாலிபான்கள் உத்தரவு
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்: திருப்பி அனுப்பியதற்கு விளக்கம்..!
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் மசோதா தடை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆறு மாதங்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அந்த மசோதாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்திருந்தார்
இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவிற்கு தற்போது ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் கூறியதை அடுத்து எந்தவித மாற்றமும் செய்யாமல் தமிழக சட்டமன்றத்தில் அந்த மசோதா மீண்டும் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
