தொடர்புடைய செய்திகள்
- ஐபோன் 13 ஆர்டர் செய்த நபருக்கு அடித்த ஜாக்பாட்: பிளிப்கார்ட் வினோத டெலிவரி!
- ஹிட் படத்தின் பார்ட் 2 எடுக்க இயக்குனர் முருகதாஸ் ஆர்வம்… இடியாப்ப சிக்கல் தீருமா?
- அண்ணா.. விருது குடுண்ணா.. – ஆஸ்கருக்கு போன ஆர்.ஆர்.ஆர்!
- ஆர் சி பி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட டிவில்லியர்ஸ்… கிரிக்கெட்டுக்கு முழுக்கு!
- போலி மருந்துகளை கண்டறிய க்யூ.ஆர் கோடு? – விலை அதிகரிக்க வாய்ப்பா?
திருக்குறளில் உள்ள ஆன்மீகத்தை யாருமே கூறுவதில்லை: கவர்னர் ஆர்.என்.ரவி
திருக்குறளில் உள்ள ஆன்மீகத்தை யாரும் கூறுவதில்லை என தமிழக கவர்னர் ஆர் என் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசிய போது திருக்குறள் என்பது ஆன்மீகமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட ஒரு புத்தகம் என்றும் நமது பாரத நாட்டின் பெருமைக்குரிய புத்தகம் என்றும் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறிய நூல்தான் திருக்குறள் என்றும் தெரிவித்துள்ளார்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி யு போப் சரியாக மொழி பெயர்க்க வில்லை என்றும் ஆதிபகவன் என்றால் கடவுள் என்று நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் மொழிபெயர்த்தபோது தவறாக மொழிபெயர்த்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
திருக்குறலாள் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை என்றும் திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள் என்றும் திருக்குறளை ஆன்மீகத்தின் வடிவமாக பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
