கடந்த சில காலமாக ஆளுனர் – தமிழ்நாடு அரசு இடையே முரண்பாடுகள் எழுந்து வந்த நிலையில் சமீபமாக ஆளுனர் வெளியிட்ட அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்கள் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே சரி என கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் சில பகுதிகளை பேசாமல் தவிர்த்தது, பாதியிலேயே சட்டமன்றத்திலிருந்து வெளியேறியது...