1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (11:18 IST)

திடீரென உயர்ந்தது தங்கத்தின் விலை!!

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
 
கொரோனா காரணமாக உலகம் முழுவதிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியது. இதனால் வேகமாக விலை உயர்ந்த தங்கம் கடந்த மாதம் உச்சபட்சமாக 40 ஆயிரத்தை தாண்டியது. 
 
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த இரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று இதன் விலை கனிசமாக உயர்ந்துள்ளது. 
 
ஆம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.39,088க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,886க்கு விற்பனை ஆகிறது.