கொடைக்கானலில் புதிய நன்னீர் உயிரினம் கண்டுபிடிப்பு!!
கொடைக்கானலில் நன்னீரில் வாழும் அரிய வகை ஜெல்லி பிஷ் கண்டறியப்பட்டுள்ளது. ஒன்பது வயதேயான சிறுவன் இதனை கண்டறிந்துள்ளான்.
கடல் வாழ் உயிரினங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இஷான் சுற்றுலா சென்ற போது இதை கண்டறிந்துள்ளான். இந்திய உயிரினங்கள் கணெக்கெடுப்பின் கீழ் உள்ள விலங்குகள் கண்டுபிடிப்பு பதிவில் இந்த ஜெல்லி பிஷ் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் கடலில் வாழும் உயிரினமான ஜெல்லி பிஷ், நன்னீரில் காணப்படுவது அரிதான ஒன்றாகும். இந்த ஜெல்லி பிஷ் இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ள ஜெல்லி பிஷ் இனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
