1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (18:57 IST)

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் தீ விபத்து

நெய்வேலியில் உள்ள   என்.எல்.சி நிறுவனத்தில் இன்று தீ விபத்து  ஏற்பட்டுள்ளது.

நெய்வேலியில் உள்ள  என், எல்.சி நிறுவனத்தில்  இன்று மதியம் இரண்டாவது சுரங்கத்தில் மணல் கடத்தும் பணி நடைபெற்றது.

அப்போது, அங்குள்ள இயந்திரம் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை  அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.