தொடர்புடைய செய்திகள்
- ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு: இனிப்பு வழங்கி கொண்டாடும் அதிமுக தொண்டர்கள்!
- பணம் கொடுத்து நிர்வாகிகளை ஈபிஎஸ் தரப்பினர் இழுக்கிறார்கள்: கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
- அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனு தள்ளுபடி
- ஓபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து கூற வந்த தாடிபாலாஜியின் மனைவி நித்யா!
- சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிப்பு: பெரும் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு கானல் நீராகிய ஒற்றைத் தலைமை: ஓபிஎஸ் காட்டில் மழை!
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நிலையான தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமியின் தரப்புக்கு சாதகமாக இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததால் அவர் ஒற்றை தலைமையை பிடித்து விடுவார் என்றே பலர் கணித்தனர்.
ஆனால் ஓபிஎஸ் தரப்பு பதிவு செய்த வழக்கின் தீர்ப்பில் ஒற்றை தலைமை உள்பட தனி தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக்கூடாது என கூறப்பட்டுள்ளது
இதனை அடுத்து ஈபிஎஸ் அவர்களின் ஒற்றை தலைமை கானல்நீர் ஆகிவிட்டதாகவும் ஓபிஎஸ் காட்டில் மழை பெய்து வருவதாகவும் அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
