தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பிய எடப்பாடி பழனிசாமி: என்ன காரணம்?
- பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும்: அதிரடியாக அறிவித்த அமித்ஷா
- ''தனித்துப் போட்டியிட திமுக தயாரா?'' முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்
- தமிழக மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வரும் தி.மு.க அரசு- டிடிவி தினகரன் டுவீட்
- எடப்பாடி பழனிசாமி செயற்கை பதவிகளை உருவாக்கினார்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
அதிமுக திருப்பி அனுப்பிய கடிதத்தை மீண்டும் அனுப்பிய தேர்தல் ஆணையர்: செம டுவிஸ்ட்
அதிமுக திருப்பி அனுப்பிய கடிதத்தை மீண்டும் அதிமுகவுக்கு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் தபால் மூலம் கடிதம் அனுப்பினார். இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என யாரும் இல்லை என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் மட்டுமே இருப்பதாக கூறி அந்த கடிதத்தை எடப்பாடிபழனிசாமி திருப்பி அனுப்பினார்
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதே கடிதத்தை மீண்டும் சத்யபிரதா சாகு திருப்பிஅனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக கடந்த 16ம் தேதி அனுப்பிய கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பிய நிலையில் அந்த கடிதத்தை மீண்டும் அதே பெயரில் தேர்தல் ஆணையர் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva
