1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Education department circular about schools

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
கொரோனா வைரஸ் பரவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ளது. இந்த சுற்றறிக்கையில் கொரோனா வைரஸ் அறிகுறி கொண்ட மாணவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
மேலும் வகுப்பறையை தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று வதந்தி கிளம்பிய நிலையில் அந்த வதந்திக்கு இன்று காலை பள்ளி கல்வி துறை விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் கட்சியின் 4 வேட்பாளர்கள் அறிவிப்பு: விளவங்காடு தொகுதியில் விஜயதாரிணி!