தொடர்புடைய செய்திகள்
- ஈபிஎஸ் படத்தை எரித்ததன் எதிரொலி: அண்ணாமலை படத்தை எரித்த அதிமுகவினர்..!
- அதிமுகவில் இணைய என்னை கட்டாயப்படுத்தினர்: பாஜக ஐடி விங் நிர்வாகி புகார்
- ஓ.பி.எஸ். இல்லத்திற்கு திடீரென சென்ற அண்ணாமலை: என்ன காரணம்?
- சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. விங் நிர்வாகிகள், கூண்டோடு விலகல்: பரபரப்பில் பாஜக..!
- அதிமுகவில் இணைவதை பக்குவத்தோடு அண்ணாமலை ஏற்க வேண்டும்: ஜெயகுமார்
செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!
செயற்கையான மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறது என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
கோடை காலம் நெருங்கிவிட்டதை அடுத்து கோடை என்றாலே அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மின்வெட்டு. கோடையில் மின் உற்பத்தி குறைவாக இருக்கும் என்பதால் மின் தட்டுப்பாடு நிலவும் என்றும் அதனால் மின்வெட்டு ஏற்படுவது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துவதோ என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் முறை வைத்து தான் மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஏற்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
