வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (11:30 IST)

விலையாத நெல் மணிகளை கொடுத்து என்ன பயன்? எடப்பாடியார் கேள்வி!

தமிழக அரசு விவசாயிகளுக்கு மிகுந்த விழிப்புணர்வோடு தரமான விதை நெல்களை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள். 

 
தற்போதைய திமுக அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. 
 
தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிர்வரும் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு தரமான விதை நெல்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.