1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ED official seized karur senthil balaji brother house

செந்தில் பாலாஜி சகோதரர் மனைவி கட்டி வரும் வீடு முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!

அசோக்குமார்
கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் மனைவி கட்டி வரும் வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி விட்டதாக கூறப்படுகிறது. 
 
கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி பல கோடி ரூபாயில் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த வீட்டை இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் சோதனையின் முடிவில் அந்த வீட்டை முடக்கி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
கரூர் புறவழி சாலையில் சுமார் 2 ஏக்கரில் அசோக்குமார் மனைவி கட்டி வரும் புதிய வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் அவரது விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் எப்போது? அமைச்சர் ராஜ்நாத் சிங்