தொடர்புடைய செய்திகள்
- மத்திய அரசு செய்யாவிட்டால் தமிழ்நாடு அரசே எய்ம்ஸ் பணிகளை தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- பொது மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என அறிவிக்கப்பட்டதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் எதிர்ப்பு
- மத்திய அரசு நலத்திட்டங்களால் இந்தியாவில் மாற்றம் - ராம சீனிவாசன்!
- தமிழ்நாட்டில் மின் கட்டணம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
- நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள்: கூடுதலாக 8,195 இடங்கள் கிடைக்கும்..!
2024 ஏப்ரல் முதல் மின்கட்டண முறையில் மாற்றம்: அதிரடி தகவல்..!
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மின் கட்டணம் முறையில் மாற்றம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணத்தில் ஒரு முக்கிய மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதன்படி மின் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 முதல் 20 சதவீதம் வரை மின்கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 முதல் 20% கட்டணத்தை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வணிக மற்றும் தொழில் துறைக்கு இந்த புதிய கட்டண முறை நடைமுறைக்கு வரும் என்றும் அதன் பிறகு படிப்படியாக வீடுகளுக்கும் நடைமுறைக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
